19 1
இலங்கைசெய்திகள்

அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸார்

Share

அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன், சிரேஷ்ட பிரதி தேர்தல்கள் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இதில் இணைந்து கொள்ளவுள்ளது.

11 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கும் இன்றுஸஅதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நிர்வாக விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...