7 36
இலங்கைசெய்திகள்

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

Share

நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்க இடமளிக்கப்படாது! கமல் குணரட்ன

நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் போராட்டம் வெடிக்கலாம் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டம் திடீரென முன்னெடுக்கப்பட்டது எனவும், இது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, ஏன் இவ்வாறு நடந்தது என்பது குறித்தும் யார் இதற்கு பொறுப்பு என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என தாம் கருதவில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு போராட்டம் நடத்தப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரும், ராணுவத்தினரும் ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய போரில் இணைந்து கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...