15 14
இலங்கைசெய்திகள்

மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு – ரணிலுடன் இணையவுள்ள 35 உறுப்பினர்கள்

Share

மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு – ரணிலுடன் இணையவுள்ள 35 உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தின் பின்னர் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் சபை கூட்டத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என யோசனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கட்சியின் கொள்கையை மீறி ஜனாதிபதி ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...