13 14
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

Share

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில், அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

அது, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழு, பொது ஊழியர்களை நிர்வகிக்கும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் அத்தகைய பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார்.

ஸ்தாபனச் சட்டத்தின்படி, இது தேர்தல் விதிமீறல் ஆகாது என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் உரிமை அரச ஊழியர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்தநிலையில், தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பிரசாரம் என்ற கபே (CaFFE), மாநாட்டில் சீருடையில் அரசு தாதியர்கள் கலந்து கொள்வது நிறுவன விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகள் இரண்டையும் மீறுவதாகக் குற்றம் சாட்டி மறுப்புக் குரல் கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...