6 31
இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

Share

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் யாரேனும் பாதாள மற்றும் குண்டர்களின் ஆதரவைப் பெற முற்பட்டால் அவசர பொலிஸ் பிரிவி்ற்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 பிரிவுகளில் அமைந்துள்ள அவசர பொலிஸ் அறைக்கு உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அந்த பாதுகாப்பில் எவரேனும் திருப்தியடையாத பட்சத்தில், அதற்கான காரணங்கனை கூறும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த அனைத்து வேட்பாளர்களும் உழைக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மூன்று சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...