6 31
இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

Share

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் யாரேனும் பாதாள மற்றும் குண்டர்களின் ஆதரவைப் பெற முற்பட்டால் அவசர பொலிஸ் பிரிவி்ற்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 பிரிவுகளில் அமைந்துள்ள அவசர பொலிஸ் அறைக்கு உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அந்த பாதுகாப்பில் எவரேனும் திருப்தியடையாத பட்சத்தில், அதற்கான காரணங்கனை கூறும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த அனைத்து வேட்பாளர்களும் உழைக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மூன்று சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...