24 66a4d7a0c3ad3
இலங்கைசெய்திகள்

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

Share

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஜனாதிபதி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்களின் உதவியுடன் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது காவல்துறை மா அதிபர் இல்லை எனவும் இதனால் தேர்தல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபர் இல்லாவிட்டாலும், அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படுமெனவும், இதனை வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் சரிவர பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கும் மற்றும் அதனை எதிர்த்து செயல்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தேர்தல்களை கண்காணிக்கும் அனைத்து அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....