6 27
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் சிக்கி இருவர் பலி: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Share

கோர விபத்தில் சிக்கி இருவர் பலி: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பிடிகல – நியாகம வீதியின் மட்டக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பிடிகல பிரதேசத்தில் வசிக்கும் மரக்கறி வியாபாரியும் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் உயிரிழந்தவரின் உறவினர்கள் எனவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் எல்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...