24 669aea772e3cc
இலங்கைசெய்திகள்

நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்

Share

நாட்டில் தயாராகும் புதிய விமான நிலையம்

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் (Nimal Siripala De Silva) முயற்சியின் கீழ் ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நடவடிக்கைகளுக்காக நவீனமயமாக்கும் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்பு ‘RAF’ மின்னேரியா என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டி ரோயல் விமானப்படைக்காக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நாட்டின் மத்தியில் அமைந்துள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2024 பாதீட்டின் கீழ் ஆரம்ப கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்காக 2 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

முதல் கட்டத்தில், தற்போதைய 2,287 மீட்டர் நீளமும், 46 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை 2,500 மீட்டராக நீடிக்கப்படும்.

அத்துடன், ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 ரக விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை ஆறு மாதங்களில் முடிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...