5 24
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தற்போதைய அரசியல் வேறும் திசை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் உண்டு என காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 22ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...