கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நபர் ஒருவர் திடீர் மரணம்
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுடைய ஒல்லியான உடலும் 05 அடி 04 அங்குல உயரமும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இறுதியாக சிவப்பு நிற சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.