24 66933d3a9416c
இலங்கைசெய்திகள்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

Share

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான தலைவர்களாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ, குடு சலிந்து, வெலே சுதா மற்றும் பொடி லஸ்ஸி ஆகிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அவர்களின் பாதாள உலகச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ மற்றும் குடு சாலிந்து ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பாதாள உலகச் செயற்பாடுகளிலோ போதைப்பொருள் கடத்தல்களிலோ ஈடுபடவில்லை என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

எனினும் இந்த குற்றவாளிகள் தற்போது தமது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை நடத்தி வருவதாக தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா ஆகியோரிடம் 04 ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும், பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பொடி லேசி ஆகியோரிடம் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களின் கைகளுக்கு இந்த கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...