24 66929f5e57109
இலங்கைசெய்திகள்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

Share

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொக்கு பெட்டி என்ற நபரின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபென்ன, குருந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவற்றில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் காணப்படவில்லை. அதற்கமைய, சந்தேகநபர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிளப் வசந்தாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கிளப் வசந்தாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...