5 11 scaled
இலங்கைசெய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Share

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டால் அரசாங்கம் நட்டம் அடையும் எனவும் இதனால் மாதச்சம்பளங்களை குறைக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழந்தால் மாதாந்த சம்பள கொடுப்பனவுகளில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதாந்த சம்பளக்கொடுப்பனவுகள் தானாகவே குறையும் எனவும், எந்தவொரு தரப்பேனும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இந்த போராட்டங்களை முன்னெடுத்தால், அவ்வாறு ஆட்சியை பிடிப்போரினாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்பொழுது மத்திய வங்கியினால் இவ்வாறு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவ்வாறு அச்சிட்டால் உலக நாடுகள் இலங்கையை கைவிட்டு விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களின் ஊடாக நாளாந்தம் திரட்டும் பணத்தைக் கொண்டே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...