5 11 scaled
இலங்கைசெய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Share

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டால் அரசாங்கம் நட்டம் அடையும் எனவும் இதனால் மாதச்சம்பளங்களை குறைக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழந்தால் மாதாந்த சம்பள கொடுப்பனவுகளில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதாந்த சம்பளக்கொடுப்பனவுகள் தானாகவே குறையும் எனவும், எந்தவொரு தரப்பேனும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இந்த போராட்டங்களை முன்னெடுத்தால், அவ்வாறு ஆட்சியை பிடிப்போரினாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்பொழுது மத்திய வங்கியினால் இவ்வாறு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவ்வாறு அச்சிட்டால் உலக நாடுகள் இலங்கையை கைவிட்டு விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களின் ஊடாக நாளாந்தம் திரட்டும் பணத்தைக் கொண்டே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...