23
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளோம்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், ஒரு குறிப்பிட்ட வரிசையில் பொதுப் போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள், பிற போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண வாகனங்கள், சொகுசு வாகனங்கள் என இறக்குமதிக்கு வேலைத்திட்டம் ஒன்றினை தயாரித்து அவர்களுக்கு வழங்கவுள்ளோம்.

இந்த குழு ஜூலை மாதம் 4ம் திகதி கூடியது, ஒரு மாதத்திற்குள், அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குள், நாட்டிற்கு எந்தப் பிரச்சினையும் இன்றி நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சாதாரண வாகனங்கள் இவற்றை ஒரு அமைப்பில் கொண்டு செல்ல உள்ளோம்“ என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...