7 7
இலங்கைசெய்திகள்

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை

Share

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதன் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் சிறுவனின் உருவம் அடங்கிய காணொளி பரவல் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் ஊடாக சிறுவனின் உரிமை மீறப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறி செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

ஒரு குற்றச் செயல் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் தொடர்பான அல்லது சந்தேகப்படும்படியான படங்களை பரப்புவது நெறிமுறைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நபரை தற்போதுள்ள சட்டத்தின்படி கையாள்வதில் சிரமம் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, எந்தவொரு குற்றச்சாட்டையும் இணையத்தில் வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் அவசரமாக தயாரிக்கப்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...