24 66891cbe58c08
இலங்கைசெய்திகள்

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்

Share

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம்

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன் அவரும், குடும்பத்தினரும் வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் உயிரிழந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதுடன், அதனை மாணவனின் தந்தை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பாகிஸ்தானை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான வீட்டுக்கு செல்வதாக கூறி குறித்த இருவரும் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த கோடிஸ்வர பாகிஸ்தானிய வர்த்தகரின் மகனின் நெருங்கிய நண்பர்களாக, உயிரிழந்த மாணவனும் மாணவியும் இருந்துள்ளனர். பாக்கிஸ்தான் வர்த்தகரின் வீடு, தொடர்மாடியின் 63ஆவது மாடியில் அமைந்துள்ளது.

முன்னதாக, மாணவர்களின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அது உறுதி செய்யப்படாத நிலையில் மர்மம் நீடித்து வருகிறது.

67ஆவது மாடியில் இருந்து வீழ்ந்த போதும் குறித்த இரண்டு மாணவர்களின் உடலங்களும் மூன்றாம் மாடியின் குளிரூட்டல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, அதுவும் ஒரே இடத்தில் சடலம் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மூன்றாம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கையளித்த பொதி ஒன்றை, உயிரிழந்த மாணவன் கீழே சென்று பெற்று வந்ததாக சிசிரிவி காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனினும் குறித்த நபர் மூலம் பெறப்பட்ட பொதி குறித்து மர்மம் நீடிக்கிறது. அதேநேரம் உயிரிழந்த மாணவர்களின் உடமைகளுக்கு அருகில் சிகரெட் பெட்டியும், வெற்று தபால் உறையும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...