24 668552d958ab7
இலங்கைசெய்திகள்

முஸ்லிம் மாணவிகளின் வெளியிடப்படாத பெறுபேறு விவகாரத்திற்கு தீர்வு

Share

முஸ்லிம் மாணவிகளின் வெளியிடப்படாத பெறுபேறு விவகாரத்திற்கு தீர்வு

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) தலையீட்டில் அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் (Sri Lanka) பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்படும் காரணத்தினால் 70இற்கும் மேற்பட்ட திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...

25 68e756024d1e0
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு: டிசம்பர் 15 அன்று பரிசீலனை – 347 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார...