24 667aa3b8cf1d2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம் பெற்ற ஆட்கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட தகவல்

Share

இலங்கையில் இடம் பெற்ற ஆட்கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட தகவல்

கடந்த வருடத்தை விட ஆட்கடத்தலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை (Sri Lanka) அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பித்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பிலான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆள்கடத்தல்களில் ஈடுபடுபவர்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு சேவைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் உரிமங்களை இரத்து செய்தது, கடத்தல்களை ஊக்குவிப்பதாக கூறப்படும் தனியார் முகவர் நிலையங்களை தடைசெய்தது என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களிற்கு அதிகாரிகள் உதவிகளை வழங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான பல விடயங்களில் அரசாங்கம் ஆகக்குறைந்த தராதரத்தை பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பிலான குறைந்தளவு சம்பவங்கள் குறித்தே அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு கடத்தல்காரர்களுக்கான தண்டனைகள் கடுமையாக காணப்படவில்லை.

இது கடத்தல்காரர்களை பொறுப்பு கூறவைப்பதற்கான முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தவில்லை, அல்லது பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சிறுவர்களை தவறான நோக்கத்திற்காக கடத்திய சந்தேகநபர்களை கூட பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த விரும்பாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது.

இந்நிலையில், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளபோதிலும் இந்த வழக்குகளில் வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...