tamilni Recovered 12 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Share

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடற்றொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தின்(Tamil nadu) – இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 22 பேரை இலங்கை அரசு கைது செய்தமையைக் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்றொழிலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை (22) காலை 507 கடற்றொழில் விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அனுமதி பெற்று தொழிலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று(23) அதிகாலை கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈபட்டுக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 22 கடற்றொழிலாளர்களை கைது செய்தனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....