tamilni Recovered 4 scaled
இலங்கைசெய்திகள்

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

Share

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு ஈபிள் கோபுரத்தின் பற்றுச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் அதன் சுற்றுலா பற்றுச்சீட்டுகளின் விலைகள் 20% அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன் படி, ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு செல்லும் வயது வந்தோருக்கான பற்றுச்சீட்டு விலை இப்போது €35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னதாக €29.10 என்ற விலையில் இருந்தது.

இந்த நிலையில், உலகின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்திற்கு அதிக பாராமரப்பு தேவைபடுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஈபிள் கோபுரத்தின் நீடித்த நிலைப்பாட்டையும் நினைவுச்சின்னத்தை நிர்வகிக்கும் நிறுவனமான SETE இன் நிதி நிலைத்தன்மையையும் உறுதி செய்ய இந்த புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...