tamilni Recovered 2 scaled
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

Share

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் (Minister of Health) பதவி உட்பட அந்த அமைச்சின் பல உயர் பதவிகளில் எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நிரந்தரமாக இணையவுள்ள ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட வைத்தியர் ஜயருவன் பண்டார (Jayaruwan Bandara) மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ (Samal Sanjeeva) ஆகியோருக்கு தகைமையின் அடிப்படையில் உரிய பதவிகளை வழங்காத சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆளும் கட்சியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...