24 6676de7e816c2
இலங்கைசெய்திகள்

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு விளம்பரங்களை செய்து நாட்டில் இயங்கிவரும் இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல கடன் வழங்கும் நிறுவனங்கள் சுற்றுலா விசாவில் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரால் நடத்தப்படுவதாகவும், அவை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு கடனை பெறுவதாகவும், ஆனால் அந்த கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உதாரணமாக, 15,000 ரூபாய் கடன் வாங்கினால், கடன் தொகையைத் தீர்க்க சுமார் 8000 ரூபாய் வட்டி அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கடன் வழங்கும் ஆறு நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வழங்குநர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...