24 667220eeea0b2
அரசியல்இலங்கை

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Share

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு விவகாரம் : சஜித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கிராம அலுவலர் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை விடுத்து, சேவை யாப்பு தொடர்பான பிரிதொரு வரைவே அமைச்சால் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வேறொன்றை அனுமதிக்கு அனுப்பி விட்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம் என போலியான செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(18.06.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு, சம்பள விகிதங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் மத்தியில் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டு, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து எந்த பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. 2016 இல் வழங்கப்பட்ட 600 ரூபா உதவித் தொகை இப்போதும் வழங்கப்படுகிறது.

கிராமப் புறங்களில் 1000 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும், நகர்ப்புறங்களில் அலுவலக கொடுப்பனவு 3000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டாலும், அது போதுமான தொகையாக இல்லை.

அலுவலகக் கட்டணத்தை சம்பளத்தில் இருந்து செலுத்தி அலுவலக வசதிகளைப் பெற்று வருகின்றனர்.

வெற்றிடங்களை நிரப்ப 1942 புதிய கிராம அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் மூன்று மாத பயிற்சிக்கு மாதம் 3000 ரூபா தொகையே அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தை இந்த பயிற்சி கொடுப்பனவாக வழங்குமாறும், இந்த விடயங்கள் அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...