23 2
இலங்கைசெய்திகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மாகாணசபை முறை தொடரும் : அனுர

Share

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மாகாணசபை முறை தொடரும் : அனுர

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போதைய வடிவத்திலேயே தொடரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

லண்டனில் (London) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேசியப் பிரச்சினைக்கு மாகாண சபை முறைமையை தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மாகாண சபையானது தமக்கு கிடைத்த உரிமை என தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நம்புகின்றன.

எனவே அந்த முறைமையை நீக்குவது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வாக மாகாணசபை முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எனினும் அது நிரந்தரத் தீர்வாகாது என்ற அடிப்படையில், நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் வரை அந்த முறையை தற்போதைய வடிவத்தில் தொடர்வதே தமது கட்சியின் கொள்கை என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...