யாழ். குறிகட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்
யாழ்ப்பாணம் (Jaffna) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலமானது நேற்று (14.06.2024) கரையொதுங்கியுள்ளதுடன் அது ஆண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை.
சடலம் மிகவும் சிதைவடைந்து காணப்பட்டுள்ள நிலையில் சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.