13 3
இலங்கைசெய்திகள்

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் : சாணக்கியன்

Share

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் : சாணக்கியன்

மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைக்கப்பட்டாலும் கூட மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன நிலையில தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி பதிந்து வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் நேற்று (13.06.2024) மட்டக்களப்பு(Batticaloa) களுதாவளையில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஒருவருட காலத்திற்கு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் அதற்குரிய சூழ்நிலை இருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் இன்னும் ஒரு வருடத்தினால் நீடிப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் ஜனாதிபதி முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியவர்கள், நாடாளுமன்றத்தையே இனிமேலும் கனவாக வைத்திருக்கும் பின்வரிசை, முன்வரிசை உறுப்பினர்களிடையே ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஒன்று நடத்தியதாக வதந்தி ஒன்றை நாமும் கேள்விப்பட்டடிருந்தோம்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தினதும், ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பது தொடர்பாகத்தான் அதில் பேசப்பட்டதாக எமக்கும் சொல்லப்பட்டது.

இலங்கையில் முக்கியமான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்திலே கொண்டு வரப்பட்டபோது. அதனை நாடாளுமன்றத்திலே வாக்கெடுப்பிற்கு விட்டபோது அரசாங்கத்திற்குச் சார்பாக 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருந்தது.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதென்பது அனைவரும் அறிந்த விடயம்.

தற்போது நாட்டிலே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பொறுமையாக இருப்பதற்குரிய காரணம், மிக விரைவாக ஜனாதிபதித் தேர்தல் வரும் அதிலே ஆட்சிமாற்றம் உருவாகும் அதன் பின்னர் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது கண்துடைப்பாக மின்சார கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும்கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி பதிந்து வைத்திருக்க வேண்டும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...