22
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாமல்

Share

கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தீர்மானம் ஜூலை நடுப்பகுதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறாரா? அப்படியானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எந்த வகையான நிபந்தனைகளுடன் இணைவார் என்பதன் அடிப்படையில் தனது கட்சியில் இருந்து வேட்பாளரை நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்னவினால் மட்டுமே வெளியிடப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் உள் அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும் அவரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டும் என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...