1 3
இலங்கைசெய்திகள்

ஆட்சி அதிகாரத்தை நீடிக்க மறைமுக முயற்சி: ரஞ்சித் ஆண்டகை கடும் குற்றச்சாட்டு

Share

ஆட்சி அதிகாரத்தை நீடிக்க மறைமுக முயற்சி: ரஞ்சித் ஆண்டகை கடும் குற்றச்சாட்டு

மக்களின் உரிமையை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் சாசனத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் பதவிக்காலம் பூர்த்தியாவதுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படுவது மக்களின் உரிமைகளில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உரிமையை தட்டிப்பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும், சிலர் தங்களது ஆட்சி அதிகாரத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ள மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்தி தலைவர்களை தேர்வு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...