17 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

Share

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையி;ல் கருத்துக் கணிப்பை நடத்தி இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றியை முன்னறிவித்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் விரிவான மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம இலங்கையில் (Sri Lanka) சுமார் 9.3 மில்லியன் பேரின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்து அவர்களின் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், சமூக ஊடக போக்குகளை ஆய்வு செய்து, மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்பிலான சதவீத மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் அண்மைய அறிக்கையில், மூன்று வேட்பாளர்களும் 25 சதவீதத்தை கூட எட்டவில்லை என்று கணித்துள்ளது.

விக்ரமசிங்க, அனுரகுமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் சராசரியாக 21 மற்றும் 22 வீத வாக்குகளை பேணி வருகின்றனர்

எனினும் தீர்மானிக்கப்படாத வாக்காளர்கள் 35 வீதத்திற்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளனர்.அவர்களே இறுதி முடிவுக்கு உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

இதே நிறுவனம் இந்தியத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை சரியாகக் கணித்துள்ளது,மோடி மகத்தான வெற்றியின் மூலம் ஆட்சிக்கு வர மாட்டார் என்று கூறியிருந்தது.

Share
தொடர்புடையது
af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...