18
இலங்கைசெய்திகள்

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிறுமிகள்

Share

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிறுமிகள்

கண்டியில் உள்ள அரச நன்னடத்தை திணைக்களத்திற்கு சொந்தமான சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுமிகளை பல்வேறு நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்கமைய நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை சந்தேகநபர் பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 8 ஆம் திகதி இரவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவர் தடுப்பு நிலையத்தின் உதவியாளர் ஒருவர் சிறுமிகளை தவறான நடவடிக்கைகளுக்காக அதே தடுப்பு முகாமில் தேவையான அறை வசதிகளை செய்து கொடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியொருவர் 06 ஆண்களுக்கு பணத்திற்காக விற்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவர் தடுப்பு நிலையத்தில் உள்ள மருத்துவ அறை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுமியின் பாதுகாப்பிற்காக தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 9 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...