24 665d17e957915
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு

Share

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் அறிவிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை ஒதுக்குமாறு ரணில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவல் அதிபர் ஊடகப் பிரிவு (President Media Division) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலையால் முற்றாக சேதடைந்துள்ள அனைத்து வீடுகளையும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரணில் (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக காவல்துறை விசேட அனர்த்த நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது.

அதன்படி, 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Screenshot 2025 04 03 155037 e1743676594629
செய்திகள்இலங்கை

கடும் இடிமின்னல் எச்சரிக்கை: இரவு 11 மணி வரை பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்!

இன்று (நவ 13) இரவு 11.00 மணி வரை கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

1660822330330 690785 850x460
இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்காக அல்ல, அதிகாரத்தைக் கைப்பற்றவே: மொட்டுக் கட்சி மற்றும் UNP-ஐ நிராகரித்த வசந்த முதலிகே!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

passport 1200px 10 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

புல்மோட்டை வீதியோரத்தில் கைவிடப்பட்ட ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மீட்பு: மர்ம நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை!

புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த, இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை புல்மோட்டை...