24 665d49abaf997
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

Share

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அதிவேகமாக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி துரத்திச்சென்று காவல்துறையினரால் மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...