24 665bc87fb84b0
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்

Share

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கான நிதியை வழங்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர் நிஹால் பிரசன்ன (Nihal Prasanna) தெரிவித்துள்ளார்.

இதன்படி, தொழில்சார் கற்கைநெறியை கற்க ஒரு மாணவருக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என உதவிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமூகம் ஏற்றுக்கொள்ளாத வேலைகளில் அந்த மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தான் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களை மாத்திரம் தெரிவு செய்வதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த படிப்புகள் மூன்றாம் நிலை மற்றும் தொழில்முறை கல்வி ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...