24 665930de61db7
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள்

Share

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள்

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 125,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அதிபர் ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனுடன், கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்த வாரத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்றும் மற்றும் நிவாரணப் பயன் பெறத் தகுதியான உண்மையான ஏழை மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையின் முதல் சுற்றில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும், புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் சமூக பாதுகாப்பு தரவு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...