24 6656a002b9f16
இலங்கைசெய்திகள்

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

Share

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

பிரித்தானியாவுக்கு இலங்கையர்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவருக்கு பிரான்ஸில் (France) பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2001இல் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்கு சென்றபின் சதாசிவம் சிவகங்கனுக்கு (Sathasivam Sivagankan) புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற 2004 முதல் 2005 வரை இலங்கைக்கு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இலங்கையர்களை கடத்தும் சர்வதேச குழுவின் முன்னணி உறுப்பினராக சிவகங்கன் இருப்பதாக பிரான்ஸின் சட்டத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ருமேனியா, இத்தாலி, ஜெர்மனி, ஹங்கேரி, உக்ரைன், ஸ்லோவேனியா மற்றும் ஒஸ்திரியாவிலிருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வளர்ச்சியில் பிரான்சுக்கும் இலங்கையர்கள் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டால் சிவகங்கன் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இந்நிலையில் இங்கிலாந்தின் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் விரைவில் பிரான்ஸிற்கு நாடு கடத்தப்படவுள்ளார். அதுவரை அவரை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 69405094615b9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

95570777 trainafp
இலங்கைசெய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்: விடுமுறை மற்றும் பரீட்சை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி...

95570777 trainafp
செய்திகள்

கிழக்கு ரயில் தண்டவாளத்தில் சேவை மீண்டும் ஆரம்பம்: 18 நாட்களுக்குப் பிறகு சீன விரிகுடாவிலிருந்து சீதுவா நோக்கிப் புறப்பட்டது முதல் சரக்கு ரயில்!

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த 18 நாட்களுக்குப் பிறகு, இன்று...

919387 00900779
இலங்கைசெய்திகள்

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தையில் விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை...