24 6656e12156b06
இலங்கைசெய்திகள்

சமுர்த்தி வங்கி முறைமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

Share

சமுர்த்தி வங்கி முறைமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் சமுர்த்தி வங்கி முறையை முறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவின் ஒரு பகுதியாக, சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வை தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் (NDO) ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற வகையில், 2017 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க திவிநெகும (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி சட்டத்தின் இலக்கம் 1ஐ திருத்துவதற்கு இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலை கோரினார்.

இந்த நோக்கத்திற்காக தொடர்புடைய சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவாளர் ஆலோசனை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புக்களை தேசிய கணக்காய்வு அலுவலகம் தணிக்கை செய்வது அவற்றின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும் மக்களின் நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதற்கும் உதவும் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரகாரம், நுண்நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 1092 சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகளும் 335 சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களும் இயங்கி வருகின்றன.

சமுர்த்தி சட்டத்தின் விதிகளின்படி, சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினால் வருடாந்தம் தணிக்கை செய்யப்படுகின்றன.

எவ்வாறாயினும், சமுர்த்திச் சட்டமானது தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற விதியை உள்ளடக்கவில்லை.

இதன்படி, சமுர்த்தியை வலுப்படுத்தும் நோக்கில் சமூக அடிப்படையிலான வங்கி முறைமை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சமுர்த்தி பயனாளியை வலுவூட்டும் நோக்கத்தில் இருந்து விலகி தற்போது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக பந்துல தெரிவித்துள்ளபார்.

மேலும், அஸ்வெசும நலன்புரி நன்மைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நுண்நிதி வங்கி அமைப்பாக சமுர்த்தி வங்கி முறையை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது

சமுர்த்தி வங்கியை முறைசாரா வங்கியாக தொடர்வதால் அதனை அரச கிராமிய வங்கியாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...