24 6653c33899ca9
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Share

சமூக ஊடகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆபத்தான சேறு பூசல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதன் முறையாக கொல்ப் அகடமி ஒன்றை ஆரம்பித்து வைத்து நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேறு பூசல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எல்.பி.எல் போட்டித் தொடரின் தம்புள்ள கழகம் தொடர்பிலான சம்பவத்தில் என் மீதும் சனத் ஜயசூரிய மீதும் குற்றம் சுமத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுக் குற்றச் செயல்களை தடுக்கும் சட்டத்தை தாமே அறிமுகம் செய்ததாகவும் உலகில் எங்குமில்லா வலுவான சட்டம் இலங்கையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சேறு பூசும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சேறு பூசுவோரின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
17 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பலமடங்கு...

16 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு உறுதியளித்திருந்த போதிலும், திடீரென எரிபொருள் விலைகளை அதிகரிக்க...

15 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா நீடிப்பு: அமைச்சரவை அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக விமானப் பயணங்கள்...

14 9
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில்...