24 6652b820205d7
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன் – சினிமா பாணியில் கொடூரம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட இளைஞன் – சினிமா பாணியில் கொடூரம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக கும்பல் ஒன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வெசாக் தோரணத்தை பார்வையிடுவதற்காக நண்பர்களுடன் ஒருகுடவத்தை நோக்கி சென்ற வேளையில் இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புவர்கள் என்ற சந்தேகத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...