24 66514f1a9edae
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Share

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரத் தடையை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகளின் கீழ், சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விநியோக மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மீது மரங்கள் விழுந்துள்ளன.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடையை சீரமைக்க தங்களால் முடிந்தவற்றை செய்வோம் எனவும் அதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அறுந்து விழுந்த மின்கம்பிகளை எந்த வகையிலும் தொடவேண்டாம் எனவும் ஊழியர்களின் பணிகளில் தடை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நெரிசல் காரணமாக அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாது எனவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் விரும்பிய விரைவான சேவையை வழங்க முயற்சித் வருகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...