24 664e2d1379adf
இலங்கைசெய்திகள்

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

Share

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

வடக்கு மாகாணத்தின் (northern province) கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா(Pradeeparaja) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழை வீழ்ச்சி 90 மி.மீ. ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும்.

ஆனால், இந்த ஆண்டு மாதம் முடிவடையாத நிலையில் இடம் சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் திங்கட்கிழமை வரை 230 மி.மீ. மழை கிடைத்துள்ளது.

இந்த மாத இறுதியில் இதனளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத்தின் இது வரையான 20 நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.

ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதி, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதி அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...