24 664d41f66be27
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசு தரப்பில் தகவல்

Share

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசு தரப்பில் தகவல்

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் உண்டு.

எனினும், ஒன்றிரண்டு வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த உரிய கால நிர்ணயங்கள் இல்லை என்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த கால வரையறை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றின் முன்னிலையில் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...