24 664d6d5ab0492
இலங்கைசெய்திகள்

எழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கொந்தளிக்கும் இனவாத அமைப்பு

Share

எழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கொந்தளிக்கும் இனவாத அமைப்பு

படைவீரர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற தேசியவாத அமைப்பு இந்த எச்சரிக்கை, கடிதம் மூலம் விடுத்துள்ளது.

தேசத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புக்களைச் செய்த படைவீரர்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

படைவீரர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்பில் மஹிந்த, கோட்டாபய ஆகியோர் மௌனம் காத்து வருவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

போரின் பின்னர் படைவீரர்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

அரசியல் இருப்பிற்காக தேசியவாத சக்திகள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, கோட்டாபய மற்றும் மொட்டு கட்சி ஆகிய தரப்புக்கள் படைவீரர்களை காட்டிக் கொடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டமை அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் பங்கேற்றதாகவும் இந்த விடயத்திற்கு கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட தரப்புக்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

படைவீரர்களை பாதுகாத்தல், தேசிய சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்கத் தவறினால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...