24 664d92b5a28df
இலங்கைசெய்திகள்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

Share

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொது தேவைகளின் அடிப்படையில் 15,667 அதிகாரிகள் மற்றும் படையினர் இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி இராணுவத்தினர் வெளியேறியமைக்கான காரணம் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறான பொது தேவைகளின் அடிப்படையில் விலகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் கூட இவ்வளவு தொகையான இராணுவத்தினர் ஒரேயடியாக வெளியேறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் இராணுவத்தை விட்டு வெளியேறியமைக்கான காரணங்களை நிச்சயமாக ஆராய வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத இடைவெளியில் 373 இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும், பொருளாதார அழுத்தத்தினால் இந்நிலை நேரடியாக இலங்கை பாதுகாப்புத்துறையில் தாக்கத்தை செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...