24 664ad6d0ca45d
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

Share

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கமானது சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையானது இன்று (20) முதல் மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்த சம்பளத்தை 25,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து, சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.ஏ.டி.சுரஞ்சீவ (T.A.D. Suranjeeva ) தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...