24 66495ab04d2f7
இலங்கைசெய்திகள்

கருமேகங்களால் சூழ்ந்திருக்கும் வானம்: முன்னெச்சரிக்கை

Share

கருமேகங்களால் சூழ்ந்திருக்கும் வானம்: முன்னெச்சரிக்கை

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...

articles2Fkdr4RAxh3Zzhkl5WtR4D
இலங்கை

மட்டக்களப்பில் போதிய பெற்றோல் கையிருப்பு: “செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” – மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் (Petrol) கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...

l91920251128120058
செய்திகள்உலகம்

இம்ரான் கான் வெளிநாடு செல்ல அரசு அழுத்தம்: பிடிஐ செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் பரபரப்புத் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச்...

images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...