வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல்
வெசாக் தன்சல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தன்சல் நடத்தப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் என ஒன்றியத்தின் செயலாளர் சானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.
மேலும், வெசாக் தன்சல் நடைபெறும் இடங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.