24 6649890f2d677
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

Share

இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல், மீரிகம, மாலதெனிய வீடொன்றுக்குள் புகுந்த 42 வயதான திருடனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 80 வயது வயோதிபர், 77 வயது அவரது மனைவி மற்றும் 42 வயது மகன் மூவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த நபர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் திருடன் பெரும் தொகை பணம் மற்றும் நகைகளுடன் பதற்றத்துடன் வீதியால் நடந்து சென்றுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் திருடனை கைது செய்துள்ளார். வீட்டினுள் இளம் வயதினர் பெரிதாக இல்லை என்பதை அறிந்த திருடன் அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...