24 6646b93f057de
இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு – சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நெருக்கடி

Share

கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு – சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நெருக்கடி

நாடாளவிய ரீதியில் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல நெருக்கடிகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாணந்துறை பரத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சடலம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் முடிந்து கிராம அலுவலர் வரும் வரை சடலத்தை வீட்டில் வைக்க வேண்டிய நிலைமை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமது சேவைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமை மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சேவைகளை பெற்றுக் கொள்ள வந்த மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அத்ததுடன், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...