24 66453d0b44ac7
இலங்கைசெய்திகள்

விஜயதாசவின் கட்சி தலைமை பதவி: நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ள நீதிமன்றம்

Share

விஜயதாசவின் கட்சி தலைமை பதவி: நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ள நீதிமன்றம்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்தமைக்கு எதிரான தடை உத்தரவு தொடர்பான உண்மைகளை முன்வைக்க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு(Duminda Dissanayake) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், குறித்த மனுவை ஏற்று தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து நீதிமன்றம் இன்று(16.05.2024) தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்சித் தலைவராக செயற்படுவதற்கு சகல தரப்பினரும் இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் கடுவெல மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில், துமிந்த திசாநாயக்கவின் முறைப்பாட்டின் நிலைப்பாட்டை சவால் செய்யும் வகையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா ஆட்சேபனைகளை நேற்று முன்வைத்தார்.

எனினும் துமிந்த திஸாநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர, கடுவெல மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வாதிட்டார்.

இதனையடுத்தே, துமிந்த திசாநாயக்கவின் தடை உத்தரவு தொடர்பான மனுவின் மீதான அறிவிப்பு நாளை காலை வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.

முன்னதாக மைத்ரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவருக்கு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்தது.

இந்த உத்தரவு பின்னர் வந்த நீதிமன்ற அமர்வுகளில் விசாரணை முடியும் வரையில் என்ற அடிப்படையில் நீடிக்கப்பட்டது.

இந்தநிலையில் மைத்ரிபால சிறிசேன, கட்சி தலைமை பதவியை துறந்து அதற்கு பதிலாக விஜயதாச ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்க ஏற்பாடுகளை செய்தார்.

இதற்கிடையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை, சந்திரிகா தரப்பினர் தெரிவு செய்தனர்.

தற்போதைய நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி விஜயதாச தரப்பு மற்றும் நிமால் சிறிபால டி சில்வா தரப்பு என்ற வகையில் இரண்டாவது செயற்பட்டு வருகிறது. இதேவேளை விஜயதாச ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து வருகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...